சினிமா
ஏலியன்களிடம் இருந்து பூமியை காக்கப்போகிறாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயனின் ட்ரீம் புராஜெக்டான ஏலியன் ஜானர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள படம் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நேற்று நாளை எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமாருடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் ஏலியன் ஜானர் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பூமியை தாக்க வரும் ஏலியன்களை, எதிர்த்து போராடும் வீரனாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கதையின் கரு கசிந்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.