தமிழ்நாடு
குறித்த தேதியில் ரஜினியின் கட்சி அறிவிப்பு சாத்தியமா..?- அப்போலோ வைத்த ட்விஸ்டு…!
![Rajini 8 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Rajini-8.jpg)
உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினி, இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று முன்னதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், அது தற்போது சாத்தியமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவல்தான்.
அப்போலோ அறிக்கையில் கூறியிருப்பதாவது,
1. ரஜினி, ஒரு வாரத்துக்கு முழு ரெஸ்டில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.
2.மிகக் குறைந்த உடல் ரீதியான உழைப்பே செய்ய வேண்டும். மற்றும் மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.
அவரின் உடல்நிலை காரணமாக, கோவிட்-19 தொற்று ஏற்படும் வகையிலான எந்தவித செயலிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்போலோ அறிக்கையில் விளக்கமாக ரஜினியின் உடல்நிலை பற்றி கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அரசியலுக்கு வருவது மீண்டும் சந்தேகமாகியுள்ளது.