தமிழ்நாடு
லோக் சபா தேர்தலில் என்ன செய்யும் பாமக?.. அன்புமணி அதிரடி பிளான்!
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமக என்ன விதமான முடிவுகளை எடுக்கும், எப்படி போட்டியிடும் என்று பெரிய கேள்விகள் எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகவும் வலுவான கட்சியாக இருந்தது பாமக. திமுகவின் கூட்டணியில் இருந்து பாமக பிரிந்து சம்பவம் இப்போதும் பலருக்கு நினைவு இருக்கலாம்.
அந்த அளவில் திமுக – பாமக பிரிவு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. வட மாவட்டங்களில் திமுகவிற்கு பெரிய துணையாக ஒரு காலத்தில் பாமக இருந்தது. இந்த நிலையில் பாமகவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் என்னவென்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்த தேர்தலில் பாமக மிக முக்கியமான கட்சியாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இப்போதும் கூட, பாமகவுக்கு வடமாநிலங்களில் நிறைய வாக்கு வாங்கி இருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமில்லாமல் டெல்டா மாவட்டங்களிலும் பாமாவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.