சினிமா செய்திகள்

நடிப்பை விட்டுவிலகும் நயன்தாரா?

Published

on

நடிகை நயன்தாரா நடிப்பை விட்டு விலக இருப்பதாக வெளியான தகவல் வெளியகியுள்ளது.

திருமணம், குழந்தை என நடிகை நயன்தாரா பிஸியாக இருப்பதால் நடிப்பில் இருந்து அவர் விலக இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் திருமணம் நடந்தது.

பின்னர் வாடகைத்தாய் முறை மூலம் இருவரும் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். திருமணம் ஆரம்பித்து, குழந்தைகள், திருமண வீடியோ இன்னும் ஓடிடியில் வெளியாகதது, தயாரித்தப் படங்கள் தோல்வியைத் தழுவியது, விக்னேஷ் சிவனுக்கு அஜித் பட வாய்ப்பு கைநழுவிப் போனது என அடுத்தடுத்து இவர்களைச் சுற்றி சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது.

இதற்கு பரிகாரமாக மூன்றாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சனைகள், குழந்தைப் பராமரிப்பு மற்றும் படத்தயாரிப்பு விஷயங்களை கவனிக்க வேண்டும் போன்ற காரணங்களால் நயன்தாரா நடிப்பை விட்டு விலக இருக்கிறார் என சொல்லப்பட்டது.

ஆனால், அதை முற்றிலும் மறுத்துள்ளது நயன்தாரா தரப்பு. தற்போது நயன்தாரா கைவசம் ’ஜெயம்’ ரவியுடன் ‘அகிலன்’, ஷாருக்கானுடன் ‘ஜவான்’ மற்றும் இன்னும் இரண்டு புதிய படங்கள் உள்ளது. குறைந்தது 100 படங்கள் நடித்து முடித்தப் பிறகுதான் ஓய்வு என்பது குறித்தே நயன்தாரா யோசிப்பார் எனவும் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version