Connect with us

தொழில்நுட்பம்

ட்விட்டருக்கு மாற்றாக வந்துள்ள ‘Koo App’ல் தகவல் கசிவா..?- ஆதாரத்துடன் விளக்கம்

Published

on

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ‘ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியிலும்’ இந்த செயலி முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கென்று தனியாக ஒரு இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ட்விட்டருக்கு அனைத்து வகைகளிலும் இந்த செயலி மாற்றாக இருக்கும் எனப்படுகிறது. சமீக காலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது.

மத்திய அரசுத் தரப்பு, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருபவர்களை அதன் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரை அடிபணியாமல் இருந்து வருகிறது ட்விட்டர். இதையொட்டித் தான் வலதுசாரிகள், கூ செயலியைப் பயன்படுத்தப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்படி கூ செயலிக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வந்தாலும் அதில் தகவல் கசிவு இருப்பதாகவும், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

பிரபல ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் இது குறித்துக் கூறுகையில், ‘இந்த புதிய கூ செயலியில் நான் 30 நிமிடங்கள் மட்டுமே செலவு செய்தேன். இந்த செயலி, அதில் இருக்கும் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை லீக் செய்து வருகிறது என்பதை கண்டறிந்துள்ளேன். பயனர்களின் இ-மெயில், பிறந்த தேதி, திருமணமானவரா என்கிற தகவல், அவரின் பாலினம் என சொல்லிக் கொண்டே போகலாம்’ என்று கூறி, தன் கருத்துக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தகவல்கள் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளார்.

இதனால் கூ செயலியைப் பயன்படுத்துவோர் மற்றும் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூ செயலி பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து ‘ட்விட்டர் தளத்தை தடை செய்ய வேண்டும்’ என்கிற கோஷம் ஓங்கி ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!