கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங் உடைத்தெறிந்த ஸ்டம்புகளின் விலை இத்தனை லட்சமா?

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில், பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இவர் இப்போட்டியின் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய இரண்டு யார்க்கர் பந்துகளில் திலக்வர்மா மற்றும் வதேரா ஆகிய இருவரும் விளையாடிய போது மிடில் ஸ்டம்பு பாதியாக உடைந்து சிதறியது.

ஸ்டம்ப்ஸ் (Stunps)

கிரிக்கெட்டில் இப்போது நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எல்.இ.டி. வகை ஸ்டம்பில் கேமரா மற்றும் மைக்ரோ போன் பொருத்தப்பட்டு இருக்கும். அர்ஷ்திப் சிங் உடைத்து எறிந்த ஸ்டம்புகளின் விலை குறித்து, தற்போது சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று ஸ்டம்ப்ஸ்கள் அடங்கிய ஒரு செட் எல்.இ.டி. ஸ்டம்பு மற்றும் பெய்ல்சின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்பை காலி செய்து விட்டதால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்காகப்படுத்தும் கிரிக்கெட் பேட்டர்களுக்கு மத்தியில், அர்ஷ்தீப் சிங் ஸ்டம்ப்ஸ்களை உடைத்து ரசிகர்களை ஒரு பௌலராக உற்சாகப்படுத்தி உள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version