தமிழ்நாடு

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியா? ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு!

Published

on

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுக தனது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அந்த பகுதியை சேர்ந்த தேமுதிக செயலாளர் கலந்துகொண்டது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கும் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகி களிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தலைமையிடம் கேட்டு சொல்வதாக அதிமுக நிர்வாகிகள் பதில் அளித்ததால் தெமுதிக நிர்வாகிகள் அதிருப்தியுடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி குறித்து தலைமை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் திடீரென தேமுதிக நிர்வாகிகள் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று தேமுதிகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்து உள்ளது என்பதும் தெரிந்தது.

 

Trending

Exit mobile version