Connect with us

சினிமா

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…

Published

on

இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க நிறுவனமும் 2000 கோடியை ஊழல் செய்து அவற்றை நடுக்கடலில் கொட்டி விடுகின்றனர் அந்தக் குண்டுகள் அவ்வப்போது அலைகளால் அடித்து வரப்பட்டு வெடிக்கின்றன. சில குண்டுகளை மக்கள் கப்பலின் பாகங்கள் என நினைத்தும் இரும்பு என நினைத்தும் உடைக்கும்போது அவை வெடித்து விபத்து நடக்கின்றன. அப்படி நடக்கும் விபத்தில் 10 கி.மீ. தூரமும் 2000க்கும் மேற்பட்ட. மக்களும் இறக்கின்றனர். அப்படி ஒரு குண்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்குகிறது. அதை இரண்டு கூட்டம் தேடுகிறது. குண்டு வெடித்ததா இல்லையா என்பதை தியேட்டரில் பார்த்துக்கொள்ளலாம்.

நல்ல கதை, நல்ல நடிகர்கள் இருந்தும் சில நேரம் சுவாரஸ்யம் இல்லாத அல்லது திசை மாறும் திரைக்கதைகளால் சில படங்கள் கொஞ்சம் மோசமாகிவிடும் வாய்ப்பு உருவாகும். அப்படியான ஒரு படம்தான் இந்த படம்.

குண்டை கைப்பற்றி ஊழலை மறைக்க நினைக்கும் ஒரு கும்பல்… குண்டை கண்டுபிடித்து ஊழலை வெளிக்கொண்டுவரும் ஒரு கும்பல்… இவர்கள் இருவருக்குள்ளும் மாட்டிக்கொண்ட நாயகன்… என்ன எப்படி என ஒரு நல்ல சேஜிங் படமாக உருவாகியிருக்க வேண்டியது…

காய்லாங்கடை தொழில்… அங்கு நடக்கும் உழைப்பு சுரண்டல்… அந்த மக்களின் வாழ்க்கை… அவற்றுக்குள் கதாநாயகனின் செயல்கள் என இப்படி யாருமே தொடாமல் விட்டிருந்த புத்தம் புதிய கதைக்களம்… சொல்ல எவ்வளவோ சொல்லியிருக்க வேண்டிய படம்…

இடைநிலை சாதி பெண்ணை காதலிக்கும் தலித் இளைஞர்… அதில் நடக்கும் சிக்கல்… அந்த கிராம மக்களின் வாழ்வியல்… அதில் உள்ள கூத்து கலை… பண்பாடு… என உருவாகியிருக்க வேண்டிய படம்… இது புதிய கதை இல்லைதான் என்றாலும் விழுப்புரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை மையமிட்டு அங்குள்ள சாதிய அரசியலை பேசி ஒரு படம் வரவே இல்லை. அதனால் இதுவும் நிச்சயம் புதிய களமாக அமைந்திருக்கும்… அமைந்திருக்க வேண்டிய படம்…

ஆனால், இத்தனை விஷயங்கள் இருந்தும் இந்தப் படம் சருக்கும் இடம் இவை மூன்றையும் ஒரே கதைக் களத்துக்குள் கொண்டுவந்து ஒன்றையும் தெளிவாகச் சொல்லாமல் செல்வதுதான்.

படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே அட ஒரு அருமையான படத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்குநர் அடுத்தடுத்து பெரிய ஏமாற்றங்களை கொடுக்கிறார்.

ரஞ்சித் தன்னுடைய அத்தனை நடிகர்களையும் இதிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்… அட்டக்கத்தி தினேஷ் லாடி ஓட்டுநராக பாடி லாங்குவேஜ், பேச்சு, லுக் என என அட்டகாசமாக பொருந்தியிருக்கிறார்… கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா, ராமதாஸ் @ முனீஷ்காந்த்… இவர்கள் நான்கு பேரும் கதையில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். மற்றவர்கள் எல்லோரும் வருகிறார்கள்… போகிறார்கள்…

இசை தென்மா… முதலில் குண்டுக்கு போடும் பின்னணி, இறுதியில் வரும் ஒரு பாடலுக்கான கிராமிய இசை தவிர மற்ற இடங்களில் பெரிதாக ஒட்டவில்லை… இன்னும் தனியிசையில் மட்டுமின்றி திரையிசையிலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறோம்…

அதிரன் ஆதிரை… கதை தேர்வு, பாத்திரங்கள் தேர்விலும், சில காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் ஒரு சிறப்பான திரைக்கதையுடன் ஒரு அட்டகாசமான கதையை எதிர்பார்க்கலாம். என்ற நம்பிக்கை இருக்கிறது… காத்திருக்கிறோம்…

ரஞ்சித் பட்டறையில் இருந்து சமூக அரசியல் சினிமாக்கள் தொடந்து வருகின்றன. தேவையும் கூட. ஆனால், அவை கதையாகவும், திரையாகவும் முழுமை பெற்றால் தான் அந்தப் பட்டறையின் நோக்கம் முழுமை பெறும். அல்லது இந்த வசனங்களையும் கருத்துகளையும் தமிழகத்தில் எளிதில் கடந்து செல்லப்படும்… அப்படித்தான் பல முக்கியமான வசனங்கள் தேவையே இல்லாமல் வருகின்றன. கடந்து செல்லப்படுகின்றன…


இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். விரைவில் அப்படியான ஒரு படத்தை எதிர்பார்ப்போம்… குண்டு பெயரில் உள்ள பிரமிப்பு படத்தில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றமே…

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!