தமிழ்நாடு

முதல்வரை சந்தித்து முத்தான பரிசு கொடுத்த இறையன்பு ஐஏஎஸ்!

Published

on

தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்தார். இந்த நியமனம் குறித்து அனைவரும் ஆச்சரியமடைந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் கண்டிப்பாக இறையன்பு ஐஏஎஸ் போன்ற திறமையான அதிகாரி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தான் எழுதிய புத்தகம் ஒன்றையும் அவர் பரிசாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறையன்பு ஐஏஎஸ் அதிகாரி மட்டுமன்றி சிறந்த எழுத்தாளர், கல்வியாளர், பேச்சாளர் என்பது அனைவரும் தெரிந்ததே. அவர் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் அந்த புத்தகங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version