தமிழ்நாடு

12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐ.பி.எஸ்: முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க நியமனம்!

Published

on

பருவமழையை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே நாளில் இருபத்தி மூன்று சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழைபெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் உபரிநீர் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் பருவ மழை பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை கண்காணிக்க, நிவாரண பணிகளை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ளது

சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள 12 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:

seithichurul

Trending

Exit mobile version