கிரிக்கெட்

ஐபிஎல் 2022: எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துள்ளது, கசிந்த தகவல்!

Published

on

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே

2022 ஆம் ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் ஒட்டுமொத்த ஏலம் விடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட ஏழு அணிகள் ஏற்கனவே தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் விபரங்களை சமர்ப்பித்து விட்டதாகவும் பஞ்சாப் அணி மட்டும் இன்று சமர்ப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏழு அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியல் குறித்த விவரங்கள் கசிந்துள்ள நிலையில் அந்த விவரங்களை தற்போது பார்ப்போம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில்நரைன், ஆந்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கனே வில்லியம்சன்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட்கோலி, கிளன் மேக்ஸ்வேல்

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப்பண்ட், பிரித்விஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

seithichurul

Trending

Exit mobile version