கிரிக்கெட்
ஐபிஎல் 2022: எந்தெந்த அணியில் யார் யார் தக்க வைக்கப்பட்டார்கள்?
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான கடைசி தேதி நேற்று தான் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது இது ஒரு தற்போது பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி- ரூ.12 கோடி, ஜடேஜா ரூ.16 கோடி, மொயின் அலி ரூ.8 கோடி, ருத்ராஜ் ரூ.6 கோடி.
ஆர்.சி.பி. அணி விராட் கோலி ரூ.15 கோடி, மேக்ஸ்வெல் ரூ.11 கோடி, முகமது சிராஜ் ரூ.7 கோடி ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது; ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.57 கோடி மீதம் உள்ளது.
மும்பை அணி ரோஹித் சர்மா ரூ.16 கோடி, பும்ரா ரூ.12 கோடி, சூர்ய குமார் யாதவ் ரூ.8 கோடி, பொல்லார்ட் ரூ.6 கோடி ஆகிய நால்வரை தக்க வைத்துள்ளது; வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.48 கோடி நிதி உள்ளது.
ஐதராபாத் அணி: கேன் வில்லியம்ஸ் ரூ.14 கோடி, அப்துல் சமது ரூ.4 கோடி, உம்ரன் மாலிக் ரூ.4 கோடி.
பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால் ரூ.12 கோடி, அர்ஷிதீப் சிங்: ரூ.4 கோடி
டெல்லி அணி: ரிஷப் பண்ட்: ரூ.16 கோடி, அக்சர் பட்டேல் ரூ.9 கோடி பிரித்வி ஷா ரூ.7.50 கோடி, அன்ரிச் நார்ட்ஜே ரூ.6.50 கோடி.
கொல்கத்தா: ரஸல் ரூ.12 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.8 கோடி, வெங்கடேஷ அய்யர் ரூ.8 கோடி, சுனில் நரேன் ரூ.6 கோடி.
ராஜஸ்தான் அணி: சஞ்சு சாம்சன் ரூ.14 கோடி, பட்லர் ரூ.10 கோடி, ஜெய்ஸ்வால் ரு.4 கோடி.