கிரிக்கெட்

9வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே: ஃபினிஷிங் தோனி

Published

on

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான முதலாவது பிளே ஆப் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் லீக் சுற்றுகள் முடிவடைந்து நேற்று முதலாவது பிளே ஆப் சுற்று நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான முதலாவது பிளே ஆப் சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடந்தது.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்ததை அடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அபாரமாக விளையாடி 60 ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை பந்துவீச்சை பொறுத்தவரை அதில் ஹசில்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா, பிராவோ, மொயின் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டூபிளஸ்சிஸ் முதல் ஓவரிலேயே அவுட் ஆனாலும், ருத்ராஜ் மிக அபாரமாக விளையாடி 70 ரன்களும், அவருக்கு இணையாக ராபின் உத்தப்பா 63 ரன்களும் அடித்தனர்.

இந்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மொயின் அலி விக்கெட் விழுந்து உள்ளது. அதன் பின் இரண்டாவது பந்தில் விளையாட வந்த தோனி தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். அதன்பின்னர் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து ஒரு மிகச்சிறந்த ஃபினிஷிங் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார். கடந்த சில போட்டிகளில் தோனி சரியாக விளையாடவில்லை என்றும், அவருடைய பெர்பாமன்ஸ் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் மொத்தம் 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள 12 ஆண்டுகளில் 9 முறை இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ருத்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாளை பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் சுற்றின் போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version