கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு! பிசிசிஐ அறிவிப்பு

Published

on

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றைய போட்டி நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே ஐபிஎல் போட்டியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது பிசிசிஐ இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் ஐபிஎல் போட்டி தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version