கிரிக்கெட்

ஐபிஎல் முதல் போட்டி: டாஸ் வென்ற விராத்கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை அணியும் கடந்த ஆண்டு ரன்னரான பெங்களூர் அணியும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முதல் போட்டியில் இரு அணிகளுமே வெல்வதற்கு தீவிர முயற்சியில் எடுப்பார்கள் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு:

மும்பை: ரோஹித் சர்மா, கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, மார்கோ ஜென்சன், ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், பும்ரா

பெங்களூர்: விராத் கோஹ்லி, ரஜத் படிடார், டிவில்லியர்ஸ், மாக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டெல், சிராஜ், சாஹல்

Trending

Exit mobile version