கிரிக்கெட்

IPL – சென்னை அணிக்கு மேலும் ஒரு சிக்கல்

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது.

இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது.

இரண்டாவது போட்டியில் சென்னை அணி, பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டாலும் பவுலிங்கில் கடுமையாக சொதப்பியது. சென்னை அணியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்பதை அறிவித்தார்.

அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லுங்கி நிகிடி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளதால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதன் காரணமாக அடுத்ததாக வரும் 16 ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை களமிறங்கும் போதும் நல்ல பந்து வீச்சாளர்கள் யாரும் அணியில் இருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. இதனால் சென்னை அணிக்கும் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version