கிரிக்கெட்

ரத்து செய்யப்பட்ட ஐபிஎல்- RCB அணியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்!

Published

on

பல வீரர்களுக்கும், அணி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த முறை ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி கேபிட்டல்ஸ். அதைத் தொடர்ந்து தலா 10 புள்ளிகள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ஆர்.சி.பி அணி இந்த முறை, எப்படியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து கோப்பையை முதல் முறையாக தட்டிச் செல்லும் என்று பலரும் ஆருடம் கூறி வந்தனர். இப்படியான சூழலில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பொங்கியெழ வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.சி.பி அணியை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே கிண்டல்களுக்கும் கேலிக்கும் வழி வகுத்துள்ளது.

ஆர்.சி.பி அணியை கேலி செய்து வந்த மீம்ஸ்கள்:

seithichurul

Trending

Exit mobile version