கிரிக்கெட்
ஐபிஎல் 2022: வீரர்களின் ஏலம் தேதி அறிவிப்பு!
![IPL 2022 Auction - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/IPL-2022-Auction.jpg)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான வீரர்களின் ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என ஐபிஎல் பிரிஷேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தற்போது உள்ள 8 அணிகள் ஒரு சில வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில் மற்ற வீரர்களை பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் எடுக்கும் என்பது குறிப்பிடதக்கது. எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது என்பது குறித்து அறிய ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.