கிரிக்கெட்
ஐபிஎல் மெகா ஏலம்: திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த தொகுப்பாளர்!
![ipl auctioner - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/ipl-auctioner.jpg)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு 10 அணிகளும் எடுத்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணி இதுவரை ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ ஆகிய இரண்டு வீரர்களை மட்டுமே ஏலம் எடுத்து உள்ளன என்பதும் மற்ற அணி விறுவிறுப்பாக வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திடீரென ஐபிஎல் ஏலம் நடைபெறும் மேடையிலிருந்து ஏலம் விடும் தொகுப்பாளர் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹூக் எட்மெடேஸ் என்பவர் இந்த ஏலத்தை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏலம் தொகுப்பாளர் மயங்கி விழுந்ததால் இன்று ஏலம் ரத்து செய்யப்படுமா அல்லது மாற்று தொகுப்பாளரை வைத்து ஏலம் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.