கிரிக்கெட்
ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் சீசன், அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நேற்று கோலாகமாகத் தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது.
சென்னை அணி 178 ரன்கள்
முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்குவாட் அதிகபட்சமாக 92 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 சிக்சர்களை அடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 ரன்களை குவித்தார்.
குஜராத் வெற்றி
இறுதியில் கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை வீரர் தேஷ்பாண்டே கடைசி ஓவரை வீசினார். 19.2 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.