கிரிக்கெட்
ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர்?
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் எத்தனை பேர்? ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது
ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள 590 வீரர்களில் இந்திய வீரர்கள் 370 பேர்க்ள் என்றும் வெளிநாட்டு வீரர்கள் 220 பேர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நாட்டின் வீரர்கள் எத்தனை பேர் என்பதை தற்போது பார்ப்போம்;
ஆஸ்திரேலியா – 47 வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் -34 வீரர்கள்
தென் ஆப்பிரிக்கா -33 வீரர்கள்
இங்கிலாந்து – 24 வீரர்கள்
இலங்கை – 23 வீரர்கள்
ஆப்கானிஸ்தான் – 17 வீரர்கள்
பங்களாதேஷ், அயர்லாந்து – தலா 5 வீரர்கள்
நமீபியா – 3 வீரர்கள்
ஸ்காட்லாந்து -2 வீரர்கள்
நேபாளம், அமெரிக்கா, ஜிம்பாப்வே – தலா ஒரு வீரர்