கிரிக்கெட்

ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி!

Published

on

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமின்றி சமீபத்தில் வீரர்களை ஏலம் விடப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி தொடங்குகிறது என்பதும், ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்பட ஒரு சிலர் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்பதும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தும் காலத்தில் உள்ளார்கள் என்பதும் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version