கிரிக்கெட்
யார்க்கர் கிங் நடராஜனுக்கு கொரோனா: இன்றைய போட்டியிலிருந்து விலகல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் ஐதராபாத் அணியின் முக்கிய போட்டியாளரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டம் துபாயில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் நடராஜனின் பந்துவீச்சை காண மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும் இன்றைய டெல்லி மற்றும் ஐதராபாத் இடையிலான போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராஜன் உடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் வென்றாலும் அதே எட்டாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் டெல்லி இன்றைய போட்டியில் வென்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.