கிரிக்கெட்

IPL- மும்பையிடம் தோற்ற KKR அணியை கழுவி ஊற்றிய சேவாக்!

Published

on

நேற்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா, தனக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை மும்பையிடம் பரிதாபமாக பறிகொடுத்தது. இதனால் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் ஏக கடுப்பில் இருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் கொல்கத்தா அணியை, வகை தொகை இல்லாமல் திட்டித் தீர்த்துள்ளார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி நேரத்தில் கொல்கத்தா சார்பில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து சேவாக், ‘முதல் போட்டியில் வெற்றி பெற்ற போது பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன், அணியின் ஒவ்வொரு வீரர்களும் நம்பிக்கையுடன் போராடுவதாக தெரிவித்திருந்தார், ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ரசலும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங் செய்ய வந்த போது இருவரும் போட்டியை அசால்டாக முடித்து கொடுத்து விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவர் கூட பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை’ என்று விமர்சித்துள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version