வணிகம்
ஐபோன் தயாரிக்கும் 3வது நிறுவனம்.. தமிழகத்துக்கு அடித்த ஜாக்பாட்!
ஐபோன் அசம்பிளிங் நிறுவனமான பெகட்ரான், சென்னையில் கிளையைத் தொடங்குவதற்கான பதிவைச் செய்துள்ளது.
உலகின் ப்ரீமியம் மொபைல் போனான ஆப்பிளின் ஐபோனை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் அசம்பிளிங் செய்து வருகின்றன. அதில் விஸ்ட்ரா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ஏற்கனவே சென்னையில் தங்களது கிளை ஆலைகளைத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவியதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் சீனாவை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உற்பத்திக்காகச் சீனாவைச் சார்ந்து இல்லாமல் அங்கு இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.
எனவே ஐபோன்களை அசம்பிளிங் செய்யும் இரண்டாம் பெரிய நிறுவனமான பெகட்ரான் இந்தியாவில், அதுவும் நம்ம சென்னையில் கிளையைத் தொடங்க உள்ளது. அடுத்த 6 மாதத்தில் பெகட்ரான் நிறுவனம் சென்னையில் தங்களது ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், பெகட்ரான் நிறுவனம் வருகையால் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.