கிரிக்கெட்

INDvENG – தோல்வியின் விளிம்பில் இந்தியா – தனி ஆளாக அரைசதம் அடித்த சுப்மன் கில் #Video

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. உணவு இடைவேளையின் போது 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. 420 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை இந்தப் போட்டியை இந்தியா, டிரா செய்தால் அது வெற்றிக்குச் சமமாக மதிக்கப்படும்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் குவிக்க, இந்தியா அதற்கு பதிலடியாக 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

தற்போது இந்திய கேப்டன் விராட் கோலி, 45 ரன்களுடனும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அரைசதம் கண்ட ஒரே வீரர் சுப்மன் கில் மட்டும் தான். நேற்று களமிறங்கியது முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் கில் மட்டும் தான்.

 

seithichurul

Trending

Exit mobile version