உலகம்

இண்டர்போல் தலைவர் மர்மமாக மாயம்.. கடத்தலா?

Published

on

பெய்ஜிங்: சர்வதேச போலீஸ் படையான இண்டர்போல் படையின் தலைவர் மெங் ஹாங்வெய் காணாமல் போய் இருக்கிறார்.

இவர் சீனாவை சேர்ந்தவர். இவருக்கு 64 வயது ஆகிறது. இவர் சீனாவின் மக்கள் பாதுகாப்பூ துறையின் துணை அமைச்சராகவும் இருக்கிறார்.

சர்வதேச போலீஸ் மற்றும் விசாரணை படையான இண்டர்போலின் தலைவராக மெங் ஹாங்வெய் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2016ம் வருடம் தேர்வானார்.

இவர் தனது மனைவியுடன் பிரான்சில் உள்ள லயன் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி சீனா சென்ற இவர் காணாமல் போய் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் மனைவி பிரான்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரான்ஸ் போலீஸ் இதற்காக தனி விசாரணை படையையும் உருவாக்கி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version