இந்தியா

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை மேலும் நீடிப்பு!

Published

on

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்களின் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்தே இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

இதனால் உலகின் பல நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version