தமிழ்நாடு

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

Published

on

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார்.

இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வட்டியிலான கடன் வழங்கும் நிகழ்ச்சி பவானியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பவானி நகராட்சியில் செயல்பட்டு வரும் 22 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 252 பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய்க் கடன் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் கருப்பண்ணன் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு கப சுர குடிநீரையும் அமைச்சர் வழங்கினார்.

seithichurul

Trending

Exit mobile version