செய்திகள்
பெண் என நினைத்து திருநங்கையை காதலித்த வாலிபர்.. தற்கொலையில் முடிந்த சோகம்…..
சமூக வலைத்தளங்களை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிக்கல்தான். வாட்ஸ் அப் காதல், முகநூல் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என காலம் மாறிவிட்டது. முகத்தை பார்க்காமலே, பெண்ணா என தெரியாமலே பல காதல் கதைகள் சமூக வலைத்தளங்களில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் காதல் ஒரு மரணத்தில் முடிந்திருக்கிறது.
ஒசூரை சேர்ந்த மஞ்சுநாத் என்கிற வலைபர் இன்ஸ்டாகிராமில் சென்னை ராயபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். நேரில் பார்க்காமலேயே 2 வருடமாக உருகி காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் உன்னை சந்திக்க வேண்டும் என அவர் கூற தான் பெண் அல்ல ஒரு திருநங்கை என் அந்த பெண் கூற அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத் அவரின் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த அந்த திருநங்கை தான் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான இவர் சென்னை காசிமேட்டை சேர்ந்தவவர். 3 வருடங்களுக்கு முன் திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ராயபுரத்தில் அம்மன் பேட்டை பகுதியில் ஆண்ட்ரியா என்கிற திருநங்கையுடன் வசித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடக்கத்திலேயே தான் ஒரு திருநங்கை என அவர் கூறியிருந்தால் அவரின் உயிர் போயிருக்காது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.