Connect with us

கிரிக்கெட்

INDvENG- ‘சும்மா பிட்ச் சரியில்லைன்லாம் புலம்பினு இருக்காதீங்க!’- இங்கி., அணியை வறுத்தெடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்

Published

on

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள புத்தம் புதிய நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் இரண்டே நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து மோடி மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இந்தியாவுக்குச் சாதகமாக அது அமைக்கப்பட்டு உள்ளது என்றும் இங்கிலாந்து தரப்பின் பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு எழுப்பினார்கள். இது குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும். 

4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரிச்சர்ட்ஸ் பிட்ச் குறித்தான சர்ச்சை குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவுக்குப் பயணம் செய்தால் இதைப் போன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகள் தான் இருக்கும் என்பது தான் நிதர்சணமான உண்மை. இதை இங்கிலாந்து அணி புரிந்து கொள்ள வேண்டும். 

அதை விடுத்து, பிட்ச் சரியில்லை, அடுகளம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் மனவோட்டத்தையும், மன வலிமையையும் சோதனை செய்யும் களம் டெஸ்ட் கிரிக்கெட். அதனால் தான் அதற்குப் பெயரே அப்படி வைக்கப்பட்டுள்ளது. 

நான் இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கண்டிப்பாக 4வது டெஸ்ட் போட்டிக்கும் பிட்ச்-ஐ பெருமளவு மாற்ற மாட்டேன். அப்படியே இருக்கும்படி தான் செய்வேன். இங்கிலாந்து அணி, தனது கம்ஃபர்ட் தளத்திலிருந்து வெளியே வந்து விளையாட்டை அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளார். 

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!