கிரிக்கெட்

INDvENG- ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியாவுக்கு வாய்ப்பு!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்றைய 4வது டி20 போட்டியில் இந்தியா, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்று சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 23 ஆம் தேதி, இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் ஆரம்பமாகிறது. இந்தத் தொடரில் முதன் முறையாக சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ தேர்வு செய்துள்ள இந்திய அணி விவரம்:

விராட் கோலி, ரோகித் சரமா, ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், சாஹல், குல்தீப் யாதவ், குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவ்னேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிராசித் கிருஷ்ணா, ஷ்ராதுல் தாக்கூர்.

நேற்றைய டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version