கிரிக்கெட்

INDvENG – 2வது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்: இங்கி.,க்கு அதிர்ச்சி; கலக்கிய அஷ்வின்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முன்னதாக இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. இதன் மூலம் இந்தியா, ஃபாலோ-ஆன் ஆகியுள்ளது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, தனது முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது. இது இங்கிலாந்து அணிக்குப் பேரிடியாக இறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார்.

இங்கிலாந்து 4வது நாள் உணவு இடைவேளையில் போது 1 ரன்னுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

இந்தியா சார்பில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக, ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முறையே 91 மற்றும் 85 ரன்கள் எடுத்தனர். சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலந்து சார்பில் டோம் பெஸ், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

Trending

Exit mobile version