Connect with us

கிரிக்கெட்

INDvENG – 3வது அம்பயர் முடிவால் வெடிக்கும் சர்ச்சை – அது அவுட்டா, இல்லையா?- ரோகித்தின் சதம் நியாயம் தானா..?

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில் விளையாடி வருகிறது. நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்தப் போட்டி தற்போது, சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், இன்று காலை போட்டித் தொடங்கியது முதல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர். தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலியும், ஆல்-ரவுண்டர் அக்சர் படேலும் தற்போது களத்தில் உள்ளனர். இந்தியா, தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட 293 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, சதமடித்து ஃபார்முக்குத் திரும்பினார். இந்நிலையில் ரோகித், விளையாடும் போது ஒரு கட்டத்தில் இங்கிலாந்து சுழற் பந்து வீச்சாளர் மோயீன் அலியை எதிர் கொண்டார். அப்போது ரோகித், ஷாட் விளையாடாமல் பேடை வைத்து மோயீனின் பந்தைத் தடுத்தார். அதற்கு இங்கிலாந்து எல்.பி.டபள்யூ கேட்டது. களத்தில் இருந்த அம்பயர், நாட்-அவுட் கொடுக்க அந்த முடிவை ரிவ்யூ செய்தது இங்கிலாந்து.

மூன்றாவது நடுவர், ரீப்ளேக்கள் மூலம் மீண்டும் நடந்தவையை சரி பார்த்து விட்டு, நாட்-அவுட் என்று சொல்லி விட்டார். ஷாட் ஆடாமல் ஒரு பந்தை வெறும் பேட் வைத்துத் தடுத்தால் அதற்கு அவுட் கொடுக்கப்படும் என்பது தான் நடைமுறை. ரோகித், ஷாட் ஆடவில்லை என்று நினைத்து தான் அம்பயர் முடிவை ரிவ்யூ செய்தது இங்கிலாந்து. காணொலிகளில் வந்த ரிப்ளேகளிலும் ரோகித், ஷாட் ஆடவில்லை என்பது போலத் தான் தெரிந்தது. ஆனால், அம்பயரைப் போலவே மூன்றாவது நடுவரும் ரோகித்துக்கு நாட்-அவுட் கொடுக்க, சர்ச்சை வெடித்தது.

ரோகித்துக்கு இப்படி அவுட் கொடுக்காமல் இருந்தது தவறு என்றும், மூன்றாவது அம்பயரின் முடிவு சரியில்லை என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரோகித்தும் அதிரடி சதம் விளாசி, அது இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணமாக அமையலாம் என்பதனால் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்து வருகிறது.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!