கிரிக்கெட்

லட்டு போல கைக்கு வந்த கேட்ச்சை விட்ட ரோகித்… நம்ப முடியாமல் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்‌ஷன்… #ViralVideo

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் மிகவும் சொதப்பலாக அமைந்தது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள், தங்கள் கைக்கு வந்த பல கேட்ச்சுகளைத் தவறவிட்டு விமர்சனங்களுக்கு உள்ளாயினர். அதிலும் ரோகித் சர்மா விட்ட ஒரு கேட்ச் குறித்தான வீடியோவும், அதற்கு இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்‌ஷனும் வேற லெவல் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை, டோம் சிப்லி இறங்கி அடிக்க முற்பட்டார். பந்து, பேட்டின் மட்டத்தில் படாமல், ஷார்ட் மிட்-விக்கெட் பகுதியில் ஃபீல்டிங் நின்றிருந்த ரோகித்திடம் மெதுவாக சென்றது. அது அவரின் கைக்கு லட்டு போல சென்று அமரப் பார்த்தது. ஆனால் சுலபமான கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் ரோகித்.

இதற்கு பெவிலியனில் அமர்ந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ், வாய் பிளந்து கொடுத்த ஷாக் ரியாக்‌ஷன், பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது. அது குறித்தான வீடியோ இதோ:

போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். மெலும் டோம் சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்கள் குவித்தனர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, 555 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும் எனத் தெரிகிறது.

சென்னை பிட்ச், பேட்டிங் செய்ய ஏதுவாக உள்ளது. இதனால் இந்தப் போட்டி எப்படியும் டிராவில் தான் முடியும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் இன்று, வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆட்டம் டிராவை நோக்கிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version