கிரிக்கெட்

“சும்மா கிரவுண்ட குறை சொல்றத விடுங்க!”- இங்கி., வீரர்களை கழுவி ஊற்றிய சோயப் அக்தர்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் முடிந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்தியா.

இந்தத் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற்றது. மூன்றாவது போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, ‘மைதானம் சரியில்லை. அது முழுவதும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது’ என்று கிரவுண்டை குறை கூறியது. இந்திய பேட்ஸ்மேன்களும் அந்த பிட்ச்சில் திணறியதால் இப்படியான விமர்சனங்கள் சர்ச்சையானது.

அதே நேரத்தில் நான்காவது டெஸ்டில் இந்திய வீரர்கள், பேட்டிங் பொளந்து கட்டினார்கள். இதனால் இங்கிலாந்து அணி மீது அதிக விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இங்கிலாந்தின் அணுகு முறை குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ‘ஒரு மைதானம் சரியில்லை என்றால் அதில் விளையாடும் எல்லோருக்கும் பிரச்னை ஏற்பட வேண்டும். ஆனால், குஜராத் புதிய மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

அந்த அணி ஒரே இன்னிங்ஸில் 365 ரன்களை எடுத்திருக்கிறது. டெஸ்டைப் பொறுத்தவரையில் இது நல்ல ரன் என்றே சொல்லலாம். ஆனால், தங்களுடைய திறமையை சரியாக வெளிப்படுத்தாமல் மைதானத்தை குறை கூறுவதில் இங்கிலாந்து வீரர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதனை ஏற்க முடியாது. இங்கிலாந்து வீரர்கள் மோசமாக ஆடிய அதே மைதானத்தில்தான் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். எனவே, மைதானங்களை குறை கூறுவதை இங்கிலாந்து வீரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

Trending

Exit mobile version