கிரிக்கெட்

INDvAUS – 2வது டெஸ்ட் வெற்றி: ரஹானே உருக்கம்!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய கேப்டன் அஜிங்கியே ரஹானே, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவுக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி, 1 – 1 என்ற சமன் செய்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி இல்லாமல் இந்திய அணியை வழிநடத்தி, பேட்டிங்கிலும் சாதித்த அஜிங்கியே ரஹானே, ‘எங்களுக்கு கிடைத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். எங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்னவென்றால், கிரிக்கெட்டை பின்தொடரும் இந்தியர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைத்ததுதான். உங்கள் ஆதரவும், வாழ்த்துகளும் எங்களுக்கும் என்றும் வேண்டும். அடுத்து வரும் இரண்டு போட்டிகளுக்கும் நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version