கிரிக்கெட்

INDvAUS – ‘Starc போட்ட பந்து கண்ணுக்கே தெரியல…’- வெள்ளந்தியாக பேசிய நடராஜன்

Published

on

ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்த்துத் திறம்பட விளையாடியது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது காபா மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி, இந்தியாவை விட 276 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி மிரட்டலான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. குறிப்பாக அணியின் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்கு விளையாடி ஸ்கோர் செய்தனர். நடராஜனும் தன் பங்குக்கு நிலைத்து ஆடினார். அதிலும் மிகக் குறிப்பாக, அதிவேகப் புயல் ஸ்டார்க்கின் ஒரு ஓவர் முழுவதையும் நடராஜன் மட்டை வைத்து கெத்து காட்டினார். இதுவும் பேசு பொருளாக மாறியது.

ஸ்டார்க்கின் ஓவரை தைரியத்துடன் எதிர் கொண்டது பற்றி நடராஜன், ‘உண்மையில எனக்கு முதல் பந்து கண்ணுக்கே தெரியல. எப்படியோ அதுக்கு அப்புறம் அந்த ஓவர் ஆடி முடிச்சேன்’ என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Trending

Exit mobile version