கிரிக்கெட்

3வது டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை: ஆடும் 11 பேரை அறிவித்தது இந்தியா!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1 – 1 என்ற ரீதியில் சமநிலை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தங்கள் முழுத் திறனை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். பவுலர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடராஜன், கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார். அதில் ஜொலித்த அவருக்குத் தொடர்ந்து டி20 தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் கலக்கினார் நடராஜன். இந்நிலையில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய முன்னணி பவுலர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஆடும் 11 பேரில் அவர் இடம் பெறவில்லை. நாளைய டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கும் 11 வீரர்கள் விவரம் வருமாறு:

அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, அனுமா விகாரி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சயினி (அறிமுகம்)

seithichurul

Trending

Exit mobile version