கிரிக்கெட்

INDvAus 3வது டெஸ்ட்: தேசிய கீதத்தின்போது கண்கலங்கிய முகமது சிராஜ் – வைரல் சம்பவம்!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வில் புகோஸ்கி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இதில் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, புகோஸ்கி நிலைத்து விளையாடி அரைசதம் கடந்து, களத்தில் உள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாகி வருகிறது

நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1 – 1 என்ற ரீதியில் சமநிலை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தங்கள் முழுத் திறனை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித் தொடங்குவதற்கு முன்னர் இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண் கலங்கினார். இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version