Connect with us

கிரிக்கெட்

INDvAUS – ‘இப்ப ரஹானேதான் பெஸ்டுனு சொன்னா…’- கோலியை சீண்டும் கவாஸ்கரின் பேச்சு

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் அஜிங்கியே ரஹானே. தன் மனைவி அனுஷ்கா ஷர்மா, இன்னும் ஒரு சில நாட்களில் தங்களது முதல் குழந்தைப் பெற்றெடுக்க உள்ளதால், அவருடன் இருக்க விராட் கோலி, இந்தியா திரும்பியுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, படுதோல்வியடைந்துள்ள காரணத்தினால், கோலி தாயகம் திரும்பியுள்ளது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இப்படி இக்கட்டான சூழலில் இரண்டாவது டெஸ்டில் அணியையும் சரியாக வழிநடத்தி, தானும் பேட்டிங்கில் சாதித்துள்ளார் ரஹானே. இரண்டுவது டெஸ்ட், தற்போது மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து களத்தில் இருக்கிறது. ரஹானேவின் சதத்தால், இந்தியா வலுவான நிலையில் இருக்கிறது. சதம் விளாசி அசத்தியுள்ள ரஹானேதான், இனி அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழ்ந்துள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘ரஹானேவிடன் உடல் மொழியில்தான் ஆக்ரோஷம் தெரியவில்லையே தவிர, அவரின் யுக்திகள் மிக ஆக்ரோஷமாக உள்ளன. இப்போதே அவரது கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது என்று நான் சொன்னால், மும்பையைச் சேர்ந்த ஒருவனுக்கு நான் ஆதரவளிப்பது போல பேசப்படும். நானும் மும்பைக்காரன் என்பதனால் இந்த விமர்சனம் என் மீது விழும்’ என்று சூசகமாக கோலியை சீண்டும் வகையில் கருத்து கூறியுள்ளார். இது கிரிக்கெட் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!