கிரிக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் சுதாரித்து ஆடிய ஆஸி.,- மீளுமா இந்தியா! #VideoHighlights

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போலவே தன் அறிமுகப் போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் விக்கெட் எடுத்து கெத்துக் காட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன். பின்னர் களத்துக்கு வந்த கேம்ரோன் கிரீன் மற்றும் டிம் பெய்ன் ஆகியோர் ஜோடி போட்டு ரன் சேர்க்கத் தொடங்கினார்கள்.

ஆட்ட நேர முடிவில் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், கிரீன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அனுபவமற்ற இந்திய பந்துவீச்சு குழு, நாளை ஆஸ்திரேலிய அணியை 400 ரன்களுக்குள் சுருட்டுமா என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் பவுலர்களில் ஒருவரான நவ்தீப் சயினி காயமடைந்தார். எனவே, நாளை ஒரு பவுலர் குறைவாகவே இந்திய அணி களமிறங்கும் என்று அஞ்சப்படுகிறது.

வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி, எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதை இந்த டெஸ்ட் போட்டி காட்டும். இன்றைய போட்டி ஹைலைட்ஸ் இதோ:

Trending

Exit mobile version