உலகம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை உயர்வு!
கடந்த வெள்ளியன்று இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவுப்பகுதியில் கடந்த வெள்ளியன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடு, கட்டிடங்களை விட்டு வெளியேற முயன்றனர். ஆனால், அதற்குள்ளாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.
இதில் முதற்கட்டமாக 43 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் கட்டிடங்களுக்குள் பலர் சிக்கியிருந்ததால் அவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன.
இந்த நிலையில், தற்போது நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 28 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.