சினிமா

“தனி ஒருவன் 2“ இயக்குநர் மோகன் ராஜா டிவிட்டர் வீடியோ

Published

on

சென்னை: இயக்குநர் ராஜா இயக்கத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனி ஒருவன் திரைப்படம் வெளியானது.

தனி ஒருவன் 2 படம் எடுக்கப் போவதாக மோகன்ராஜாவும், ஜெயம் ரவியும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்திலாவது நயன்தாராவுக்கு நியாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன்ராஜா தனி ஒருவன், வேலைக்காரன் எனத் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். அவர் அடுத்து விஜய்யை வைத்துப் படம் இயக்குவார் என்றும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் தற்போது இன்று தனிஒருவன் படத்தின் 3 ஆண்டு நிறைவந்துள்ள நிலையில் ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2 அவர் இயக்கவுள்ளார் என்பது தான் அது. இந்த அறிவிப்பை இயக்குநர் மோகன் ராஜா தனது டிவிட்டர் வீடியோவில் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version