வணிகம்

விமானம் ரத்தாகிவிட்டதா? கவலை வேண்டாம்.. பிளான்-பி அறிவித்த இண்டிகோ!

Published

on

கொரோனா ஊரடங்கு, காலநிலை சரியில்லை போன்ற காரணங்களுக்காக விமான ரத்தாகிவிட்டதா? கவலைபடாதீங்க. உங்களுக்காக இண்டிகோ நிறுவனம் பிளான் – பி திட்டத்தை அறிவித்துள்ளது.

விமான பயணத்தின் போது கொரோனா, கால நிலை மாற்றம் அல்லது தாமதம் போன்ற தடங்கல் ஏற்பட்டால், விமானம் ரத்தானால் கூடுதல் கட்டணம் ஏதுமில்லாமல் பிளான் – பி திட்டத்தை பயன்படுத்தி வேறு நாள் அல்லது வேறு விமானம் மூலம் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யக்கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு அறிவித்ததை அடுத்து, உள்ளூர் போக்குவரத்து சேவை பாதிக்கும் என்பதால் இண்டிகோ நிறுவனம் பிளான் – பி திட்டத்தை அறிவித்துள்ளது.

பிளான் – பி திட்டம் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ள ஊரடங்கு, விமானம் ரத்து, கால நிலை மாற்றத்தால் விமானம் தாமதம் போன்ற காரணங்களின் போது மட்டும் தான் செயல்பாடும் என அறிவித்துள்ளது.

மேலும் விமான பயணிகள் ஒரு முறை பிளான் – பி திட்டத்தைத் தேர்வு செய்துவிட்டால், மீண்டும் அதை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இது போன்ற சூழலில் பிளான் – பி தேர்வு செய்ய விரும்புபவர்கள் www.goindigo.in என்ற இணையதளம் சென்று பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version