Connect with us

இந்தியா

இந்தியாவின் UPI, சிங்கப்பூரின் PayNow இணைப்பு.. இந்திய சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி..!

Published

on

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் டிஜிட்டல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்தது என்பது UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் வழக்கம் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் மூலம் பண பரிமாற்றம் செய்யும் தொகையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் இந்தியாவின் கடைகோடி மக்களுக்கும் UPI என்பது சென்று சேர்ந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்தியா மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் UPI சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இரு நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளில் இந்த கட்டண இணைப்பு முறைகளின் படி இரு நாடுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் எல்லை தாண்டிய பண பரிவர்த்தனைகளை வேகமாகவும் குறைந்து செலவிலும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளின் இணைப்பு இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளதாகவும் இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் ரவி மேனன் ஆகிய இருவரும் தலைமை தாங்கி இந்த வசதியை துவக்கி வைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிற்கு டிஜிட்டல் பேமென்ட் உள்கட்ட வகுப்பை உலகமாக்குவதில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் அதன் ஒரு தொடக்கமாக இந்திய மற்றும் சிங்கப்பூர் செயலிகள் இணைப்பு பார்க்கப்படுகிறது. இந்த வசதி மூலம் சிங்கப்பூரில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த செலவில் பண பரிமாற்றம் செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணம் பரிமாற்றம் மற்றும் பணம் அனுப்புவது என்பது மிகவும் எளிதாகும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைவரும் டிஜிட்டல் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நோக்கம் என்றும் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிலும் UPI மூலம் பண பரிமாற்றம் நடைபெறும் வசதியை படிப்படியாக மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் சிங்கப்பூரின் PayNow மற்றும் இந்தியாவின் UPI இணைய இருப்பதை அடுத்து இருநாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!