இந்தியா
இந்தியாவின் UPI, சிங்கப்பூரின் PayNow இணைப்பு.. இந்திய சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி..!
![upi paynow - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/upi-paynow.jpg)
இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் டிஜிட்டல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்தது என்பது UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் வழக்கம் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் மூலம் பண பரிமாற்றம் செய்யும் தொகையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் இந்தியாவின் கடைகோடி மக்களுக்கும் UPI என்பது சென்று சேர்ந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்தியா மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் UPI சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இரு நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளில் இந்த கட்டண இணைப்பு முறைகளின் படி இரு நாடுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் எல்லை தாண்டிய பண பரிவர்த்தனைகளை வேகமாகவும் குறைந்து செலவிலும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளின் இணைப்பு இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளதாகவும் இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் ரவி மேனன் ஆகிய இருவரும் தலைமை தாங்கி இந்த வசதியை துவக்கி வைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிற்கு டிஜிட்டல் பேமென்ட் உள்கட்ட வகுப்பை உலகமாக்குவதில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் அதன் ஒரு தொடக்கமாக இந்திய மற்றும் சிங்கப்பூர் செயலிகள் இணைப்பு பார்க்கப்படுகிறது. இந்த வசதி மூலம் சிங்கப்பூரில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த செலவில் பண பரிமாற்றம் செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணம் பரிமாற்றம் மற்றும் பணம் அனுப்புவது என்பது மிகவும் எளிதாகும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைவரும் டிஜிட்டல் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நோக்கம் என்றும் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிலும் UPI மூலம் பண பரிமாற்றம் நடைபெறும் வசதியை படிப்படியாக மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் சிங்கப்பூரின் PayNow மற்றும் இந்தியாவின் UPI இணைய இருப்பதை அடுத்து இருநாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.