வணிகம்
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் ஆதித்யா பூரி!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக எச்டிஎப்சி-ஐ உருவாக்கிய பிறகு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார்.
எச்டிப்சி வங்கியின் தலைமை பொறுப்பில் 26 வருடங்களாக ஆதித்யா பூரி தலைமை வகித்துள்ளார். தற்போது இவருக்கு 70 வயது ஆகியுள்ளதால், ஆர்பிஐ விதிகளின் படி தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும். எனவே திங்கட்கிழமை எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது கடைசி நாளான நேற்று, அடுத்து தலைமை பொறுப்பை ஏற்கும் சஷிதர் ஜகதீஷ் பங்கேற்றார். மேலும் இவரது ஓய்வு விழாவை எச்டிஎப்சி வங்கியின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டுகளித்தனர்.
எச்டிஎப்சி வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு 6.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் ஆதித்யா பூரிக்கு முக்கிய பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.