இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை வெற்றிகரமாக நிறுவிய சென்னை நிறுவனம்.. எங்கு தெரியுமா?
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தைச் சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் என்ற நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவியுள்ளது.
இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை இஸ்ரோ ஊக்குவித்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் எஸ் அண்மையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தைச் சென்னையைச் சேர்ந்த அக்னிக்குள் என்ற நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நிறுவியுள்ளது, இந்திய விண்வெளித் துறையின் அடுத்த மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதில் அக்னிக்குள் ஏவுதளம் மற்றும் அக்னிக்குள் மிஷன் கட்டுப்பாட்டு மையம் ஆகிய 2 பிரிவுகள் உள்ளன.
விரைவில் இந்த அக்னிக்குள் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட்கள் விண்ணில் ஏவப்படும் என இன்ஸ்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன.