வணிகம்
பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க வரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: நாராயண மூர்த்தி!
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
மேலும், 1991-ம் ஆண்டு மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தது போன்று, மீண்டும் குழு ஒன்றை அமைத்து வணிகம் செய்ய உள்ள சிக்கல்களை எல்லாம் தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்பதற்கு அனுமதியளித்தால், வாரத்திற்கு 6 நாட்கள், தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தனியார் நிறுவன ஊழியர்கள் தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.