Connect with us

இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்கார இந்தியர்கள்.. கோல்டன் விசாவுக்கு விண்ணப்பித்த 5000 மில்லியனர்கள்

Published

on

புதுடெல்லி: நிறைய பணக்கார இந்தியர்களுக்கு பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கோல்டன் விசா திட்டம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீடுகள் வழியாக பிற நாடுகளில் குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கும், திறமையானவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்களை ஈர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா திட்டம். குறிப்பாக பெரிய முதலீட்டிற்கு பதிலாக இருப்பிடமும் குடியுரிமையும் இந்த விசா மூலம் வழங்க முடியும்.

இந்த விசா பெற விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட கொரோனா தொற்றுநோய் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக விசா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சராசரி வளர்ச்சியை விட இது 50 சதவிகிதம் அதிகமாகும். ஏராளமான பணக்கார இந்தியர்கள் இந்த கோல்டன் விசா குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்தியர்களின் தேவை மற்ற நாடுகளுக்கு எப்போதும் வலுவாக இருந்துள்ளது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இந்தியர்கள் உட்பட உலகமுழுவதிலிருந்தும் தேவை அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்தின் லா விடா கோல்டன் விசாஸின் மார்க்கெட்டிங் மேனேஜர் எலிசபெத் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

பெரு வணிகத்தில் முதலீடு செய்வதன் மூலமோ, அல்லது ரியல் எஸ்டேட் துறைக்கான சொத்துக்கள் வாங்குவதன் மூலமோ வெளிநாடுகளில் இருப்பிடம் மற்றும் குடியுரிமையை பெற இவர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

பல பணக்கார இந்தியர்களுக்கு சர்வதேச வணிகம் அல்லது ஐரோப்பா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி ஆகியவை இந்த கோல்டன் விசா பெற முயற்சிப்பதற்கான முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய செல்வ இடம்பெயர்வு மதிப்பாய்வின் தரவுகளின் படி, கடந்தாண்டு அதிகப்படியான பணக்கார தனி நபர்கள் வெளியே செல்லும் மூன்றாவது நாடாக இந்தியா இருந்துள்ளது, கிட்டத்தட்ட 5000 மில்லியனர்கள் அல்லது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் 2% பேர் கடந்த 2020 இல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், போர்ச்சுக்கல் நாடு அதிக அளவில் கோல்டன் விசா திட்டத்தை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் இந்தியர்களிடையே இது மிகவும் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் போர்ச்சுக்களில் கோல்டன் விசா வாங்குவதற்கான நுழைவு நிலை 280,000 அமெரிக்க டாலர் என்கிற நிலையில் உள்ளதால் ஐரோப்பிய திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், இந்தியர்களிடையே விருப்பமான நாடுகளாக நியூசிலாந்து, கரீபியன் தீவுகள், போர்ச்சுகல், மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேலும், மால்டா, சைப்ரஸ் மற்றும் கரீபியன் நாடுகளான செயின்ட் கிட்ஸ், ஆன்டிகுவா, கிரெனடா மற்றும் டொமினிகா போன்ற நாடுகளும் இந்திய குடிமக்களுக்கு இரண்டாவது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!